
இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதை வடிவம். 2004 ஆம் ஆண்டு மகேந்திரன் அவர்களாலேயே எழுதப்பெற்றது. அவரே நூலின் தொடக்கத்தில் கூறியது போல இந்தப்புத்தகத்தினை அத்திரைப்படத்தைப் பார்த்துப் பார்த்து எழுதியிருக்கிறார். அதனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த புத்தகமும் உரையாடல் வடிவிலேயே உள்ளது. இடையிடையில் கதைசொல்லியாக வெளியில் வந்து காட்சியினை விளக்குகிறார் மகேந்திரன்.
இத்திரைப்படம், புதுமைப்பித்தனின் சிற்றன்னை குறுநாவலினைத் தழுவி எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் அது வெளிவந்த காலத்தில் மிகப்பெரிய பாராட்டுதல்களைப் பெற்றதாக இருந்திருக்கிறது. அப்பொழுது வெளிவந்த பாராட்டுச் செய்திகளை புத்தகத்தின் இறுதிப்பகுதியில் தொகுத்திருக்கிறார்கள். இயக்குநரே இப்புத்தகத்தினை எழுதியிருப்பதால், நாம் கவனிக்காமல் விட்ட காட்சிகளையும், அதன் உள்ளர்த்தங்களையும் இப்புத்தகத்தினை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வாசிக்கலாம்.